பக்கம்:ஒரே உரிமை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

யாருக்குப் பிரதிநிதி?


அவ்வளவுதான்; ஸ்ரீமான் அன்னவிசாரத்துக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்துவிட்டது. அவர் படுக்கையை விட்டுத் 'தடா'லென்று கீழே குதித்தார், குப்பனுக்கு நேராகச் சென்று ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு, "அடேய், அதிகப் பிரசங்கி! நான் யாருக்குப் பிரதிநிதி என்றா கேட்கிறாய்? சொல்கிறேன், கேட்டுக் கொள்: நான் எனக்குப் பிரதிநிதி; என் மனைவிக்குப் பிரதிநிதி, என் மக்களுக்குப் பிரதிநிதி; என் வீட்டுக்குப் பிரதிநிதி! உனக்கும் பிரதிநிதி இல்லை; உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதி இல்லை, போ!" என்று கத்தி விட்டுக் குளிக்கும் அறையை நோக்கி 'மந்திரி நடை' நடந்து சென்றார்.

"அப்படிப் போடுங்கள், ஒரு போடு! அடுத்த 'எலெக்ஷன்' வரும் வரை தான் நமக்குக் கவலையில்லையே!" என்று தன் பதி சொன்னதை அப்படியே ஆமோதித்தாள் அவருடைய சதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/112&oldid=1149396" இலிருந்து மீள்விக்கப்பட்டது