பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பூவை எஸ். ஆறுமுகம்

சரி: கதையைக் கேளுங்கள். அப்போது எனக்கு வயது என்ன தெரியுமா?

ஊ ஹும், சொல்ல மாட்டேன்! சினிமாக்காரர்களுக்கு மட்டும்தானா வயதை மறைக்கும். உரிமை உண்டு?

அன்று:

நான், பாலகுரு. சுகுனா, தங்கப்பன் எல்லோரும் சடுகுடு விளையாடிக்கொண்டிருந்தோம்.

விளையாட்டில், வழக்கம் போல் அடியேனுக்குத்தான் வெற்றி, தோற்றவர்கள் எல்லோரும்.