பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஒளிவளர் விளக்கு

குழைந்து குழைந்து நெகிழ, உள்ளம் குழைந்து குழைந்து உருக உருக்கம் என்பதன் உருவமாகவே அவர்கள் நிற்கிருர் கள். அங்கே தலையெடுப்பாக கிற்கிறவர் யார்? வெடிப் பாகப் பேசுகிறவர் யார்? உலகியல்பிலே கினேவு செலுத்து கிறவர் யார்? எல்லாரும் இறைவன் அருளிலே கரைந்து ஒன்றி நிற்கிருர்கள். அவர்களுடைய என்பு கூடக் கரைந்துவிட்டனவோ? அங்கே செருக்கு இல்லை; தருக்கு இல்லை; ஆணவ முனைப்பின் நிழல்கூட இல்லை.

இந்தப் புதிய அநுபவம் புதிய அன்பருக்குப் புதிய கிலேயை உண்டாக்கிவிட்டது. அவரும் அடியவர்கள் கூட்டத்தில் ஒருவராகிவிட்டார். கடினமாக இருக்கும் காய் பழுத்தால் நெகிழ்ச்சி பெற்று கிறம் பெற்றுச் சுவை பெற்றுத் தன்னைத் தாங்கிய மரத்தின் பற்றையும் விடுவது போல, அடியவர் கூட்டத்தில் சேர்ந்து இறைவனுடைய அன்புணர்ச்சியிலே கனிந்த பிறகு அவருக்கும் கண்பனி அரும்பியது; கைகள் குவிந்தன; இறைவன் திருமுன் ஒலமிட்டார்; அவர் பேச்சும் பார்வையும் செயலும் எண்ணமும் குழைந்து வந்தன. என்பெலாம் உருகும் அன்ப்ர் தம் கூட்ட்த்தில் சேர்ந்து விட்டார்; வம்பர் கூட்டத்தை அடியோடு மறந்தார்.

ஒரு நாள் தனியே அமர்ந்து எண்ணிப் பார்த்தார். தாம் முன்பு வம்பர் கூட்டத்தில் இருந்தது நினைவுக்கு வந்தது. அடியவர்களேச் சோம்பேறிகளென்றும், பொறுப்பற்றவர் களென்றும், பைத்தியக்காரர்கள் என்றும் எண்ணியதை கிசினத்துத் தாமே சிரித்துக் கொண்டார். உடனே அவர் கண்ணில் குபுக்கென நீர் சுரந்தது. "இப்படி இருந்த என்னேயும் அன்பர் கூட்டத்தில் ஒருவகை இறைவன் சேர்த்து விட்டானே! அவன் கருணையை என்னவென்று சொல்வது!" என்று எண்ணித்தான் அவர் உருகிக் கண்ணிர் விட்டார். -