பக்கம்:ஓங்குக உலகம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊழ்வினையும் ஆள்வினையும்

187


வெல்லுவதாகுமோ? செயலாற்றும் வீரன் தன் ஆள்வினையின் திறத்தால் முன்னிற்பதைத் தள்ளிவிட்டு, மேலே முன்னேறிச் செல்ல முடியுமே! இதைத்தான் வள்ளுவர் ஆள்வினை உடைமையில் காட்டுகின்றார். மேற்கொள்ளும் வேறு முயற்சிகளைத் தடுக்கும் வகையில் ஊழ் முன்னிற்குமேயன்றி, அம்முயற்சி வலுவுடைத்தாகி ஊழை உடைப்பதாயின் தான் அதை வெல்வது கூடாது என்பதே வள்ளுவர் காட்ட நினைத்த உண்மை. மற்றவற்றைத் தடுக்கும் வகையில் ஊழ் முன்னிற்குமே ஒழிய அது வெற்றி பெறாது என்பது தெளிவு. இந்த உண்மையினையேதான் ஆள்வினை உடைமை என்னும் அதிகாரத்தில் தெள்ளத் தெளியக் காட்டிவிடுகின்றார் வள்ளுவர்.

ஊழினைப்பற்றிக் கூறும்போது ‘தான் முந்துறும்’ எனக் காட்டிய வள்ளுவர் ஆள்வினை உடைமையைக் கூறும்போது, அவ்வினையுடைமை ‘ஊழையும் உப்பக்கங் கானும்’ நிலையினைத் தெளிவாகக் காட்டிவிடுகின்றார். தெய்வத்தான் ஆகாதனவும் ஆள்வினையுடைமையால் ஆகும் எனக் காட்டிய வள்ளுவர் அங்கே ஊழ்வினை வந்தால் என்னாகும் என்ற வினாவினை எழுப்பி, அதற்குப் பதில் உரைப்பார் போன்று,

“ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்”

என விளக்கங் காட்டுகின்றார்.

எனவே, வள்ளுவர் கருத்து ஊழ்வினையிலும் ஆள்வினை உடைமையே வலுவுடைத்தென்பதும், திண்ணிய ஆள்வினையால் செயலாற்றும் எவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/190&oldid=1135863" இலிருந்து மீள்விக்கப்பட்டது