பக்கம்:ஓங்குக உலகம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

ஓங்குக உலகம்



அவர் பெயரால் பல தனியார் நிறுவனங்களும் அரசாங்கப் பாலங்கள், குடியிருப்புக்கள் போன்றவையும் இருப்பினும், நிலைத்து என்றும்-எல்லா வேறுபாடுகளும் அற்ற அத்தலைவர் திரு.வி.க. பெயர் இருக்கும் வகையில் தமிழக அரசாங்கம் ஆவன செய்யக் கடமைப்பட்டுள்ளது. தமிழ் மக்களும் அதற்குரிய தங்கள் பங்கை ஆற்றி அளிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

(24-8-1982)



10. பண்டிதமணி

சைவ சித்தாந்த மகாசமாசத்தின் ஆண்டு விழாக்களில் பண்டிதமணி அவர்கள் பெரும்பாலும் கலந்து கொள்வார்கள். நான் 1931 முதல் என் இளமை தொட்டே அவ் விழாக்களில் கலந்து கொள்வேன். பண்டிதமணி அவர்கள் சமாச விழாக்களில் ஆற்றும் சொற்பொழிவுகள் பொருள் ஆழம் பொதிந்தவையாயும் திருவாசகம் போன்ற சமய இலக்கியங்களின் நுண் பொருளை விளக்குபவைகளாகவும் அமையும். ஒருமுறை திருவாசகச் சொற்பொழிவில் ‘இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு ஒத்து’ என்ற தொடருக்கு அவர் தந்த விளக்கமே என்னை அவரிடம் ஈர்த்துப் பழக வைத்தது. அத் தொடருக்கு அதற்குமுன் பலர் விளக்கம் சொல்லவும் எழுதவும் கேட்டிருப்பினும் ‘உள்’ என்ற சொல்லுக்குப் பண்டிதமணி அவர்களே தெளிந்த விளக்கந்தந்தனர்.

‘ஒரு உள்ளே புழையுடை மூங்கில் குழாய்’ உள்ளே எறும்பு புகுந்தது. மூங்கிலின் இருபுறமும் தீ பற்றிக் கொண்டது. எப்படி அந்த எறும்பு தப்ப முடியும்? வெறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/67&oldid=1135798" இலிருந்து மீள்விக்கப்பட்டது