பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

73

நான்கே பார்ப்பனன் நச்சுத் தன்மையால் 140
தீங்குறும் இனத்தினைத் தேற்றலும் அரிதே!

ஐந்தே, தமிழ்ப்பண் பாடகன் றொழிமே!

ஆறே, தமிழ்மொழி இலக்கிய இலக்கணம் வேறு
வேறாய் விலகி யழியுமே!

ஏழே, சமசுக் கிருதம் எழுந்து
பாழெனத் தமிழரை அடிமைப் படுத்துமே!

எட்டே, தமிழினம் இனியும் சிதறிக்
கெட்டுப் படிப்படிக் கீழ்மையுற் றழிமே!

ஒன்பதே, பொதுநிலை யுடைமை கிரம்பிய
மன்பதை இங்கு மலர்த்துதல் அரிதே!150

பத்தே. அரசியல் அதிகார நிறைவே
எத்தானும் எய்தல் இயல்வதா காதே.


இத்தகு வியலாமை என்றும் இருந்திட
ஒத்ததுன் உளமெனில் ஒற்றுமை பேசலாம்!
இத்தளை நீக்கி எதிர்கா லத்துப்
புத்துணர் வெய்திடும் புதுக்குமு காயம்,
தோற்றிட வேண்டும் என்பையேல் அரசினை
மாற்றிட வேண்டும் இந்நிலை மறுத்தே
ஒற்றுமை ஒற்றுமை என்றே உரைப்பது
வெற்றுரை மட்டு மன்றே; வீணுரை160


ஒன்றை மட்டும் நினைவில் ஊன்றுக
என்றைக் கென்னினும் எவரிடத் தென்னினும்
அரசியல் நலன்கள் ஆயிரம் வரினும்
பொருளியல் நலன்கள் பூத்துக் குலுங்கினும்
உரிமை யில்லாத் தமிழகம் தமிழர்க்குக்
கருவில் லாத கழிநிலை மலடி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/83&oldid=1163685" இலிருந்து மீள்விக்கப்பட்டது