பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கஞ்சியிலும் இன்பம்

நினைவு வரவே பூனை வாங்கி வளர்க்கலானார். பூனைக்கு வேண்டிய போஷணை வேண்டுமே! தம்மை எலிப் பகைவனிடமிருந்து காப்பாற்ற வந்த பூனையை நன்றாக வளர்க்கா விட்டால், எலி கொழுத்துப்போய்க் கோவணத்தைக் கெடுத்து வாழ்க்கையையே நாசமாக்கிவிடுமே ! பூனைக்குத் தினங்தோறும் பால் யாசகம் செய்து கொடுத்து வந்தார். அடுத்தபடியாக ஒரு மாட்டையே வாங்கிக் கட்டினர். அதைப் பார்த்துக்கொள்ள ஒரு பையன். அவனுக்குச் சோறு போட ஒரு பெண் - இப்படி அவர் குடும்பம் வளர்ந்தது. கடைசியில் அந்தப் பெண்ணையே மணந்துகொண்டு சந்நியாசி ஒரு பெரிய குடும்பி ஆகிவிட்டார்.

கோவணத்தைக் காப்பாற்ற ஆரம்பித்துக் குடும்பத்தைச் சம்பாதித்துக்கொண்ட சந்நியாசியின் கதை, தமிழ் நாட்டு நாடோடிக் கதைகளில் ஒன்று. ஒரு பொருளில் பற்று வைத்துவிட்டால் அது வளர வளரப் பல பொருள்களின் சம்பந்தமும், அவற்றால் கவலைகளும் அதிகப்பட்டுக் கொண்டே வரும். இந்தத் தத்துவத்தை நினைத்து வள்ளுவர், 'எந்த எந்த விஷயத்தினின்றும் ஒருவன் தூர விலகி நிற்கிறானோ, அந்த அந்த விஷயத்தினல் வரும் துக்கத் திலிருந்து அவன் விடுதலை பெறுவான்' என்று சொல்கிறார்.

"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்."

ஆசையானது ஒன்றிலிருந்து ஒன்றைப் பற்றிக் கொண்டு விரிந்து படர்கிறது என்ற உண்மையை இந்த நாட்டு நூல்கள் அதிகமாகச் சொல்கின்றன. தேவைகள் வரவர அதிகமாவதுதான் நாகரிகம் என்று நினைக்கிறோம். மனித வாழ்க்கையில் பல படிகள் செல்வ நிலையால் ஏற்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நிலைக்கும் தக்கவாறு தேவைகள் வரவர விரிந்துகொண்டே போகின்றன. சிறு செடியாக முளைத்துக் கொழுகொம்பைப் பற்றித் தாவிப் பந்தல் முழு-