பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடும்ப விரிவு

51

சோறாக்கிப் போடக் குப்பாயி என்ற பெண்ணைக் கட்டி வைத்தாள்.

குப்பாயியின் தகப்பன் குரங்காட்டி சிறு வயசில் அவளுக்குக் குரங்கு பேன் பார்ப்பது வழக்கம். புருஷன் விட்டிலும் பேன் பார்க்க ஒரு குரங்கு வேண்டுமென்று விரும்பி அவனிடம் சொன்னாள். அவன் எஜமானியிடம் சொன்னன். குரங்குக் குட்டி பேன் பார்த்தால்தான். குப்பாயி சோறு சமைப்பாள். அவள் சோறு சமைத்தால் தான் வேலைக்காரப் பையன் செளக்கியமாக இருப்பான். ஆகையால் எஜமானி ஒரு குரங்குக் குட்டி வாங்கிக் கொடுத்தாள்.

மணி ஒன்று வேலைக்காரனுக்குக் கிடைத்தது. அதைத் தன் வீட்டில் கொண்டு வந்து, கட்டினன். குரங்கு அதைக் கல்லால் அடித்து விளையாடியது. குப்பாயி பார்த்தாள். " ஒரு கொட்டாப்புளி. இருந்தால் என் குரங்குக் குட்டி மணியை அடித்து விளையாடுமே! என்று முனு முனுத்தாள். வேலைக்காரனுக்குத்தான் வேண்டியதைக் கொடுக்க எஜமானி இருக்கிறாளே! கடைசியில் குரங்குக் குட்டிக்காக அவள் கொட்டாப்புளி, வாங்கிக் கொடுத்தாள்.

குந்தாணி வேண்டுமென்று ஆரம்பமான ஆசை கொட்டாப்புளி வரைக்கும் வந்தது. கொட்டாப்புளி இருந்தால்தான் மணியை அடித்துக் குரங்குக் குட்டி : சந்தோஷமாக இருக்கும். குரங்குக் குட்டி சந்தோஷமாக இருந்து பேன் பர்ர்த்தால்தான் குப்பாயி சோறு ஆக்குவாள். குப்பாயி சோறு ஆக்கினால்தான் ஒட்டப் பையன் எருமை மேய்ப்பான். அவன் மேய்த்தால்தான் எருமை பால் தரும் எருமை பால் தந்தால்தான் கைப் பிள்ளை வளரும்.கைப்பிள்ளை வளர்ந்தால்தான் கணக்குப் பிள்ளையின் சாவுக்குப் பயன்படுவான். கணக்குப்பிள்ளை