பக்கம்:கடல் முத்து.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லைச் சக்தி 1 I I விசித்திரமான புராணக் கற்பனை!’ அதிசயமான போட்டி!" அர்த்தமில்லாத காதல்!" "அற்புதம்!” மோசம். . .படுமோசம்!” பெண் அல்ல!... பேய் காளி. இவ்வளவு பெரிய ஜனக்கூட்டத்திலே நீ அந்தப் பயலுக்குப் போட்டியாகக் காலைத் தூக்கிச் சமமாக நடனம் ஆடிவிட்டாயே? நிருத்ய ஆசிரியரின் மகனை நான-இந்தச் சோமநாதன இனி உன்னை ஏறெடுத்துப் பார்ப்பேன்? அது வெறுங்கனவு. சிவபிரானுடன் போட்டியிட்டுத் தோற்ற அந்தக் கல்லழகி-எல்லைச் சக்தி கூட உன்னுடைய இந்தத் துணிச்சலைக் கண்டு தலை கவிழ்ந் திருப்பாளே! நீ பெண்ணு? நீ காளி...மகா துர்க்கை!...ஒடு, திருவாலங்காட்டைவிட்டுத் தில்லைக்கு ஒடு!...” “ஆண்மையுள்ள ஆணழகரே, நிறுத்துங்கள் உங்கள் சொற்பொழிவை. நான் பெண்; அசல் தமிழ்ப் பெண். உலகம் தெரிந்த்வள்தான் நான். அந்தத் தில்லைச் சக்தியா நான். அப்படிக் கால்துக்கி நடனம் ஆடாமல் இருக்க? நான் பார்வதி அல்லவா? பார்வதி ஒருநாளும் அந்தத் துரை ராஜனுக்குத் தோற்றவள் அல்ல! ஞாபகம் இருக்கட்டும், மிஸ்டர் சோமநாதன். தாங்கள். இனி என்னை ஏறெடுத்துப் பார்க்கவே வேண்டாம்; கண்களை மூடிக்கொண்டு ஜபம் செய்யுங்கள். நீங்கள் கண்ணை மூடுவதற்கு எவளாவது ஒர் அபலை வந்து உங்கள் கண்களைத் திறப்பாள். . . . வார்த்தைகள் அளவுக்கு மிஞ்சிக் கனம்பெறுகின்றன. அப்படியென்ருல், நடன நாடகம் என்ன ஆவதாம்? அதன் உயிர்க் கருத்து என்ன ஆவதாம்? அது தூசுக்குச் சமானம். சிவனுக்கு அந்தச் சக்தி தோற்றிருக்கலாம். இந்தப் பார்வதி நடனத்தில் எவனுக் கும் சளைக்கமாட்டாள்; தோற்கமாட்டாள்; என் சபதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/120&oldid=764966" இலிருந்து மீள்விக்கப்பட்டது