பக்கம்:கடல் முத்து.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடல் முத்து

11

 ......

‘தேவர் ஐயா, உங்களுக்கு லீலாவைத் தெரியுமா?′

‘என்ன, லீலாவையா? ஆமா தம்பி′ என்றான் தேவன் பதட்டம் குரவில் இழையோட.

கண்கள் நீரைச் சொரிய நின்ற நடேசனைக் கவனித்த தேவனுக்கு உலகம் சுற்றியது. அவன் எடுத்து நீட்டிய புகைப்படத்தைப் பார்த்த தேவனுக்குக் கண்முன் தெரிந்ததெல்லாம் ஆலவட்டம் சுழன்றன. அந்தப் படத்தில் மூன்று உருவங்களிருந்தன. தேவன்——லீலா——நடேசன். அந்த நாளில் எடுத்தது!

‘நடேசா ஆமா——நீ என் மகன்' என்று அலறினான் தேவன், நடந்த சம்பவங்களை எண்ணினான்.

நடேசனின் தாய் லீலா——பர்மாவில் தேவன் இருக்கையில் அவனது அன்பிற்குப் பாத்திரமானவள். ஆனால் திடீரென்று கிளம்பிய உள்நாட்டுக் கலகம் அவர்களைத் திசைவேறாகப் பிரித்தது. தேவன் தாயையும் சேயையும் மறந்தான். காலம் மாற்றிவிட்டது அவனை. பின் மூண்ட பர்மா யுத்தத்தில் உயிர் தப்பிய அவர்கள் எப்படியோ காலத்தை ஓட்டினார்கள். நடேசனும் பெரியவனானான். அதற்குள் அவன் அன்னையின் வாழ்வும் முடிந்தது. மரணப் படுக்கையில்தான் அவள் தன் மகனுக்கு ரகசியத்தை உணர்த்தினாள். இதை நடேசன் மனத்திலேயே புதைத்துவிட்டான். எதற்கும் ஓர் வரையறை உண்டல்லவா? தன் தாயை வஞ்சித்ததற்குத் தேவனிடம் பழிவாங்கத் துடித்தான் நடேசன். ஆனால்...?

தேவனுக்கு நடேசன் தன் மகன் என்று அதுவரை தெரியவே தெரியாது. அவன் தாண்டில் புழுவாகத் துடித்தான்; விம்மினான். சம்பவங்கள் எத்துணை விந்தையாக உருப்பெற்றுவிட்டன?

‘நடேசா.’

புத்துணர்வில் மகனை அழைத்தான் மாசிமலைத்தேவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/20&oldid=1184849" இலிருந்து மீள்விக்கப்பட்டது