கடந்த ஆண்டில் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியபோது அவரோடு உரையாடலைக் கடல் முத்துவோடு தொடங்கினேன். அவருடைய பல நூல்களைப்பற்றிப் பேசினோம் என்றாலும் ‘கடல் முத்து’வைச் சிறப்பாக நான் மீண்டும் வாசிக்க விரும்பியதோடு அந்நூலைச் சரியாக நாற்பதாண்டுகளுக்குப் பிறகு இக்கால வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவும் ஆசைப்பட்டேன்.
திருத்தங்கள் ஏதுமின்றி அந்நூல் இப்போது உங்கள் கரங்களில் திகழ்கிறது. இதில் அடங்கும் கதைகள் கிராமியச் சூழல்களின் உயிர்ப்புநிலையைக் கண்முன் நிறுத்துகின்றன. இளங் காதலர்கள், ஏழ்மையில் வாடுவோர், இலட்சியங்களுக்காகப் போராடுவோர் பலரை இக்கதைகளில் சந்திக்கலாம். தஞ்சை மாவட்டக் கிராமியப் பேச்சுமொழியைக் கேட்டு இன்புறலாம்.
இந்நூலை மறு அறிமுகம் செய்யும் வாய்ப்பினை வழங்கிய அன்பர் பூவை எஸ். ஆறுமுகம் அவர்களுக்குக் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
அன்பன்
சென்னை
பொதுச் செயலாளர்
1-8-1993
கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்
iv