பக்கம்:கடல் முத்து.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையலும் தையலும் மாடன் குடிசையினுள் நுழைந்த சமயம் மெல்லிய முனகல் சப்தமொன்று அவன் காதில் நன்ருக விழுந்தது: கையில் வைத்திருந்த மகுடியைத் தடாரென்று கீழே போட்டு விட்டுத் திரும்பினன். 'தம்பி...' தரையில் விரித்திருந்த கிழிந்த பாயில் படுத்திருந்த தமையன் முருகுவின் அழைப்பு அவன் செவியில் ஏறிற்று. ஆனலும் அப்போதைய மனநிலையில் அந்த வார்த்தைகள் மாடனுக்கு நெருப்பாகத் தகித்தன. வேதனை பெருமூச்சாகி வெளியேறிற்று. 'தம்பி, கொஞ்சம் விளக்கைப் பொருதுவேன்...இருட்டு கம்முன்னு இருக்கு...கண்ணுகூடத் தெரியல்லே... சங்கிலிக் கருப்பண்ணசாமி, இதுவா உன் சோதனை? ஊம்...இருந் திருப்பிலே உடம்புக்கு இப்படி வந்திருச்சே. தேற எம்பிட்டு நாளாகுதோ...பாவம், மாடனுக்குத்தான் வீண் சிரமம்...” நெருப்புக்குச்சியைப் பெட்டியின் ஒரத்தில் உரசி விளக் கேற்றினன் மாடன். இருண்ட வெளியில் ஒளி பரவிற்று. அவன் இருண்ட மனத்திலுங்கூட நம்பிக்கை ஒளி உதய மாவது போன்ற பிரமை இழைந்தது. வஞ்சி!" - மாடன் கம்மிய குரலில் அப்பெயரைத் தனக்குள் ஒரு முறை அழைத்துப் பார்க்கலானன். அழைத்த வாய் கமழ்ந் தது. அவன் இதயத்திலே இன்ப ஊற்றுப் பெருகிற்று. "கருப்பண்ணசாமி, வஞ்சி எனக்குக் கிட்டுவாளா? எட்டாப் பழமாகிவிடமாட்டாளே? ஒனக்கு ஒரு பொங்கல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/76&oldid=765051" இலிருந்து மீள்விக்கப்பட்டது