பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




2. கண்முன்னே காரியம்!


‘நன்றே செய், அதை இன்றே செய்’ என்பதற்கேற்றவாறு, அம்பிகைக்கு ஆகவேண்டிய காரியத்தை இன்றைக்கே தொடங்கிவிட வேண்டும் என்று மீனாட்சியிடம் விடைபெற்றுக்கொண்டு, வெளியே கிளம்பினார் தருமலிங்கம்.

அம்பிகைக் கோயிலைச் சுற்றித்தான், அந்த ஊரின் தெருக்கள் அழகாக அமைக்கப்பட்டிருந்தன. யார் எங்கே புறப்பட்டாலும், அம்பிகையின் கோயிலைக் கடந்துதான் போகவேண்டும். அப்படி ஒரு பக்தி நிறைந்த ஊரின் அமைப்பு அது.

கோயில் முன்னே வந்ததும், காலில் போட்டிருந்த காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு, கண்களை மூடியவாறு, கைகளைத் தலைக்குமேலே உயர்த்தி, மிகவும் பயபக்தியுடன் அம்பிகையை வணங்கினார் தருமலிங்கம்.