இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடவுள் கைவிட மாட்டார்
61
அப்பா இப்படி நிற்கிறார் என்பது அவனுக்கு எப்படித் தெரியும்? பத்துவயது பாலகன் ஆயிற்றே!
‘அப்பா பசிக்குது! அப்பா பசிக்குது’ என்று அழுகையோடு மகன் பேய்க் கூச்சல் போட்டவுடன் தான், அற்புதசாமிக்கு ஒரு அபூர்வமான யோசனை தோன்றியது.
அப்படியே தன் மகனைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு கூத்தாடத் தொடங்கிவிட்டார்.
ஆமாம்! மகனால்தானே இப்படி ஒரு மாபெரும் யோசனை மூளைக்கு வந்தது!