பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81



உனக்கு உள்ளழகு இல்லேயே என்பதையும், நீதி நெறியினின்றும் சிறிதும் பிசகாதத்தில் தோன்றிய ,நி அக்குலத்துக்கு மாசினைத் தேடித் தந்தனேயே என்பதையும் எடுத்து மொழிந்து இராமனே இடித்து உரைப்பதற்கேயாகும்.

இன்னோரன்ன இனிய கருத்துக்களை இவ்வுலகம் அறியவே கம்பர், இராமன் இரண்டாம் தரம் பயன்படுத்திய அம்பிற்கு வேகம் கொடுத்து விடுக்காமல், தடைசெய்து நிறுத்திக் காட்டினர். ஆகவே, இது காகுத்தன் கணையின் தோற்ற்ப் பொலிவு துலங்கும் இரண்டாம் இடமாகும். இனி மூன்றாம் இடத்தில் முகுந்தனாம் இராமன்து முனை அம்பின் சிறப்பைக் காண்போமாக. அந்த இடம் இராவணன் வதையுண்ட இடமாகும்.

இராகவனாம் காகுந்தன் இராவணனது மார்பகத்தில் தன் அம்பைப் போக்கினான். ஈண்டு அவ்வம்பு செய்த செயல் வியக்கத்தக்க செயலாகும். அவ்வம்பு தாடகையின் உடலலில் பாய்ந்தபோது, வேகமாகப் பாய்ந்து வெளியே வந்தரற்போல் வந்திலது. வாலியின் உரத்தில் ஊடுருவத் தொடங் கியபோது, வாலியினல் தடைப்ப்ட்ட்து போலத் தடையும் பட்டிலது. பின்னை, யாது செய்தது? இராவணன் மார்பகம் முழுமையும் துளை செய்து விட்டது. இங்ஙனம் செய்ததன் நேர்க்கம் யாது? இங்ஙனம் துளை செய்தது என்பது எங்ஙனம் புல்னாகிறது? இவற்றிற்குரிய விடையாக இராவண்ன் மனையாள் வய்விட்டுப் புலம்பிய பாடல்களுள் ஒன்றான,

வெள்ளெருக்கம் சடைமுடியான் வெற்பெடுத்த
திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடனின்றி உயிர் இருக்கும்
இடம்காடி இழைத்த வாறே