பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம் அடிக்கு மேல் 分控

குறிப்பிலும் அதைப் பற்றிய செய்தி காணப்படுகிறது. இன்றைய புதுவைக்குத் தென்பாகத்தில் உள்ள அரிக்கன்

மேட்டில் யவனர் இருக்கை இருந்தது. புதுக்கை பூம்புகார்

ஆகிய இவ்விரு நகரங்களிலும் மரக்கலங்கள், பல்வேறு

அணிகள் அமைத்தனர். சிற்பங்களே வடித்தனர். உறைக் கிணறுகள், குளங்கள் அமைத்தனர். ஏற்றுமதி, இறக்குமதி:

சுங்கம் ஆகியவை இருந்தன. பதினைந்தாவது அாயி

மன்னரின் காதலியாகிய மதாம் போம்பதுார் சீமாட்டிக்குப்

புதுவையில் நெய்த மெல்லிய துணியைப் பொற்பேழையில் வைத்துச் செஞ்சிகொண்டான்' என்ற புகழ் பெற்ற புஸ்ஸி என்பவர் அனுப்பினர்.

இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் புதுச்சேரி முதல்வர் உரையோடு நிறைவெய்தின.

மாலை 5.30 மணிக்கு யுனெஸ்கோ மாளிகையில் திரு மால்கம் ஆதிசேவுையா ஒரு சிற்றுண்டி விருந்து அளித்தார். தமிழ் மாநாட்டுக்கு வந்திருந்த பிரதிநிதிகளும், யுனெஸ்கோ நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், அயல் காட்டுத் தூதுவர்களும் இந்த விருந்துக்கு வந்தார்கள். உணவுப் பண்டங்களையும் பானங்களையும் வரிசை வரி சையாக வைத்திருந்தார்கள். அவரவர்கள் தட்டை எடுத்து வேண்டியவற்றை வேண்டிய அளவுக்கு எடுத்து வைத்து உண்ணலாம். உலாவியபடியே உரையாடிக் கொண்டு அவற்றை விருந்தினர் உண்டார்கள்.

கான் வழக்கமாக உடுக்கும் கதர்த் தற்ருடையும் மேலே ஜிப்பாவும் அதன் மேல் அங்க வஸ்திரம்போல் மடித்துப் போட்டிருந்த கல்கத்தாக் கம்பளிச் சால்வையும் அணிக் திருந்தேன். ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தபோது கெட்டை யாகவும் பருமகைவும் உள்ள ஒரு பெண்மணி மிகவேகமாக என் அருகில் வந்து அமர்ந்தார். கான் போட்டிருந்த, சால்வையைப் பார்த்து, 'இது எவ்வளவு அழகாக இருக் கிறது! இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்ருர். தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் பெயர்