பக்கம்:கண்ணகிக் கதை.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20

கண்ணகி கதை

வேண்டுவன செய்யுமா று அமைச்சர்கட்கு ஆணையிட்டான்.
அரங்கேற்ற நாள் குறிக்கப்பட்டது. கலைவல்ல புலவர்க்கும்,
சுவைகொள்ளும் அறிஞர்க்கும் (ரசிகர்கள்), அருள் உள்ள
செல்வர்க்கும் அழைப்பு விடுத்தான்.

பாட்டு

காவிரிப்பூம் பட்டினத்தில்-பட்டினத்தில்
    கரிகாலன் திருநகரில்-திருநகரில் பாவலர்கள் துதிக்குமவன்-துதிக்குமவன்
    பண்ணமைந்த மாசாத்துவான்-மாசாத்துவான்
பெற்றெடுத்த நற்புதல்வன்-நற்புதல்வன்
    பெருமை கொண்ட கோவலனாம்-கோவலனாம்
கற்றபெருங் கலைவாணன்-கலைவாணன்
    கலையருமை அறிந்திடுவான்-அறிந்திடுவான்
திருமகளும் கலைமகளும்-கலைமகளும்
    மருவுமொரு திருவாளன்-திருவாளன் உருவமிகு பேரழகன்- பேரழகன்
    உத்தமனாம் கோவலற்கும்-கோவலற்கும் அரங்கேற்ற அழைப்பிதழும்-அழைப்பிதழும்
    அரசனவன் அனுப்பிவிட்டான்-அனுப்பிவிட்டான்
விரைந்துசபை அடைந்துவிட்டான்-அடைந்துவிட்டான்
    மேலான கோவலனும்-கோவலனும் கரிகாலன் சபையடைந்த-சபையடைந்த
    கலைவள்ளல் கோவலனும்-கோவலனும் அருகிருந்த ஆசனத்தில்-ஆசனத்தில்
    அமர்ந்துமகிழ்ந்து இருந்தானய்யா-இருந்தானய்யா
கலைவல்ல புலவரெல்லாம்-புலவரெல்லாம்
    கருணையுள்ள செல்வரெல்லாம்-செல்வரெல்லாம்
கலையழகைக் காண்பதற்கு-காண்பதற்கு
    கருத்துடனே வீற்றிருந்தார்-வீற்றிருந்தார்.