பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் மனம் தூங்கும் இடம் மனம் இப்போது உலகத்தில் ஈடுபட்டுக் கிடக்கிறது. துன்பத்திற்குக் காரணமாகிய சிற்றின்பத்தைத் தரும் பொருள் களில் தூங்கி அவற்றில் கிடைக்கும் துளித் துளி இன்பத்தைப் பெற்று அதில் மயங்கி மீட்டும் பிறவிக்கு ஆதாரமாகிய செயல் களைச் செய்ய முயல்கிறது. அப்படியின்றி இறைவனுடைய திரு வடித் தாமரையில் புகுந்து அங்கே தூங்கவேண்டும். அப்போது அதற்கு வேலை இல்லாமல் போய்விடும். நிறைந்த தேனை உண்ட வண்டு அந்தச் சுவையினால் மயங்கிப் போய், பறப்பதும் ஊதுவதும் இல்லாமல், அப்படியே தூங்குவது போல, மனம் இறைவனுடைய பாதாம்புயத்தில் தூங்கவேண்டும். அப்படித் தூங்கினால் செயல் மாண்டு அடங்கிவிடும். செயல் மாண்டு அடங்குவதில் உண்டாகிற இன்பம் பேரின்பம். அதுதான் முத்தி. புத்தியை வாங்கி நின் பாதாம்புயத்தில் புகட்டி அன்பாய் முத்தியை வாங்க அறிகின்றிலேன். இறைவனுடைய திருவடிகளைப் பாதாம்புயம் என்று சொன்னமையினால் அதன்கண்ணே புகுத்தும் புத்தியை வண்டு என்று கொள்ளவேண்டும். இப்படிக் கொள்வதை ஏகதேச உருவகம் என்று இலக்கணத்தில் சொல்வார்கள். புத்தியாகிய வண்டை முருகனுடைய பாதமாகிய தாமரையில் புகும்படி செய்ய வேண்டுமென்பதே அருணகிரிநாதருடைய கருத்து. 3 முத்தி நிலை முத்தி அல்லது மோட்சம் என்பது சீட்டு வாங்கிக் கொண்டு பிரயாணம் செய்கிற இடம் என்று நினைக்கக் கூடாது. அது ஒரு வகை நிலை. மாயாவிநோத மனோதுக்க வாழ்வில் சிக்கித் திணறு மனிதன் அஞ்ஞானத்தின் விளைவாகிய செயல்களை விடுத்து, ஞான நெறியில் நிற்கவேண்டும். அந்த நெறியில் நன்றாக நடந்து சென்று இந்திரியங்களை அடக்கவேண்டும். இந்திரியங்களுக்குத் தான் அடிமையாகிவிடாமல் அவற்றைத் தனக்கு அடிமையாகக் கொண்டு ஒருமுகப்பட்டு நிற்கவேண்டும். இன்ப துன்பங்கள் க.சொ. 11-22 327