பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈயாதவர் படும் பாடு உடையவர்கள் பொருள் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. ஒரே வகையில் திட்டமிட்டு ஒரே முறையில் இரண்டு பேர்கள் உழைத்து வருகிறார்கள்; வியாபாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இருவருக்கும் ஒரே வகையில் பொருள் கிடைக்கிறதா? ஒருவன் சிறந்த செல்வனாக இருக்க, மற்றொரு வன் கையிலுள்ளதையும் இழந்து வறியவனாகப் போகிறான். நினைத்ததை நினைத்தபடியே திட்டமாக ஈட்டுகிற வாய்ப்பு, பொருள் முயற்சியில் கிடைப்பது இல்லை. கணக்கும் முறையும் தெரிந்தால் பொருளை அடையலாம் என்றால், எல்லோருமே பொருளை ஈட்டிவிடுவார்கள். நம்முடைய அறிவுக்கு எட்டாத ஒன்று இந்தப் பொருளை ஈட்டுவதற்குத் துணையாக இருக்கிறது. முன்னை வினைப் பயத்தினால் பொருள் குவிகின்றது, அழி கின்றது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அருள் நினைவு ஆகவே, நாம் ஈட்டிய பொருள் நம்முடைய முயற்சியால் வந்தது என்று நினைப்பதே தவறு. நம்முடைய ஆற்றல் நமக்கு உதவுகிறதென்று எண்ணுவதும் தவறு. நம்மையெல்லாம் கருவி யாக்கி ஏதோ ஒர் ஆற்றல் இயக்குகிறதென்ற நினைவு வந்தால், இந்தப் பொருள் நாம் ஈட்டியது அன்று என்ற நினைவும் உண் டாகும். எல்லாம் இறைவன் திருவருளால் வந்தது என்ற நினைவு வரவேண்டும். உலகிலுள்ள எல்லாப் பொருளையும் ஆட்டி வைத்து, அவரவர்களுடய புண்ணிய பாவப் பயன்களுக்கு ஏற்ற அநுபவத்தைக் கூட்டி வைத்து, அருள் செய்கிற பரம் பொருள் ஒன்று உண்டு என்ற நினைவு வந்தால் நம்முடைய நெஞ்சம் கசியும். பரம் பொருளின் நினைவை உடையவர்கள் அதற்கு முன்பு எவ்வளவு கடுமையான நெஞ்சு உடையவர்களாக இருந்தாலும், இறை அன்பு முதிர முதிர அவர்கள் நெஞ்சு நெகிழும். உண்மையான அன்பு உடையவர்களுக்கு நெஞ்சம் நெகிழும். மாம்பழம் மாமரத்தில் மாங்காய் இருக்கிறது. அது பார்க்கப் பச்சையாக இருக்கிறது. அதன் சுவையோ புளிப்பு. மரத்திலிருந்து அதைப் பறித்தால் பால் வருகிறது. மரத்தினின்றும் பிரிவதற்கு மனம் க.சொ.:V-7 37