பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரம் கண் மாலோன் மருகனை என்று தொடங்குகிறார் அருணகிரியார். மக்களில் அழகு நிரம்பி யவர்கள் இருக்கிறார்கள். இயற்கையாக அழகு உடையவர்கள் ஆடையும் அணியும் புனைந்து கொண்டால் பின்னும் அழகாகத் தோற்றுவார்கள். எவ்வளவு அழகு உடையவர்களாக இருந்தாலும் தங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை யாரை யும் விடுவது இல்லை. அழகுமிக்க பெண்கள் தாம் மேலும் மேலும் பல பண்டங்களால் அழகை மிகுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற ஆசையைப் பெற்றிருக்கிறார்கள். இந்த நவீன நாகரிக காலத்தில் எங்கே பார்த்தாலும் அழகு செய்யும் கருவிகள் மலிந்திருக்கின்றன. ஒரு மனிதன் தன்னைப் பல்வேறு சமயங்களில் பல்வேறு வகையில் அலங்கரித்துக் கொள்வான். அவனுடைய அலங்காரத் தில் மிகவும் சிறந்தது அவன் திருமணக் கோலத்தில் இருக்கும் போது அமைகிறது. ஒருவன் அலங்காரம் செய்து கொண்டிருந் தால், 'மாப்பிள்ளை மாதிரி இருக்கிறது" என்று சொல்வது உலக வழக்கம். திருமணக் கோலத்தில் மாப்பிள்ளையாக இருக்கும் போது இயற்கை அழகும், செயற்கை அழகும் பொருந்தி விளங்குவது ஆண்மகன் இயல்பு. முருகன் பேரழகன் என்பதைச் சொல்ல வருகிறார் அருண கிரியார். அவன் மாப்பிள்ளைத் துரை என்று சொல்கிறார். யாருக்கு மாப்பிள்ளை அழகுக்குச் சிறந்த பெருமானாகிய திரு மாலின் மாப்பிள்ளை அவன். திருமாலும், திருமகளும் அழகுத் திருவுருவங்கள். அழகான மாமனாருக்கும், அழகான மாமியாருக் கும் மாப்பிள்ளையாக வந்தவன் முருகன். மாப்பிள்ளைக்கும், பிள்ளைக்கும் ஒரு வேறுபாடு உண்டு. தகப்பன் அழகாக இருந் தால் பிள்ளையும் அழகாகத்தான் இருக்க வேண்டுமென்ற வரை யறை இல்லை. இயற்கையிலே அமைவது உரு; ஆகையால் அழகான பிள்ளையைத்தான் பெறவேண்டுமென்று நினைத்துப் பெற முடியாது. ஆனால் பெண்ணைப் பெற்றவர்கள் தம்முடைய முயற்சியினால் அழகான மாப்பிள்ளையைத் தேடிக்கொள்ளலாம். ஆகவே அழகான மாமியாரும், அழகான மாமனாருமாகிய திரு மகளும் திருமாலும் தம்முடைய அழகான குழந்தைகளான 157