பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பய பக்தி L க்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபக்தி என்ற தொடரை அடிக்கடி நாம் உபயோகிப்பது உண்டு. ஆனால் அதன் சரியான பொருள் இன்னதென்று பலருக்குத் தெரிவது இல்லை. யாரிடத்தில் பயம் உண்டாகிறதோ அவரிடத்தில் பக்தியும் உண்டாகவேண்டுமென்றே பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார் கள். தந்தையினிடம் பயபக்தியாக நடந்து கொண்டான் என்பது போல உதாரணத்தையும் காட்டுகிறார்கள். மேல்நாட்டு ஆராய்ச்சி யாளர் சிலர், கடவுளிடம் பக்தி கொண்டு வழிபடுவதற்கு மூல காரணம் பயம் என்று எழுதியிருக்கிறார்கள். ஆதி மனிதன் இடியைக் கண்டு பயந்தானாம். அதையே கடவுள் என்று போற்றி னானாம். இவ்வாறு பயமும் பக்தியும் ஒரே பொருளிடத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு பயபக்தி என்பதற்குப் பொருள் சொல்வார்கள். அது அவ்வளவு பொருத்தம் என்று எனக்குத் தோன்றவில்லை. பயம் ஓரிடம் பக்தி வேறு இடம் பயமுள்ள இடத்தில் போலிப் பக்தி தோன்றுமேயொழிய உண்மையான பக்தி தோன்றாது. முரட்டு ஆள் ஒருவன் நம்மை அடிக்க வருகிறான். அப்போது அவனிடத்தில் நாம் பயந்து போகிறோம். நயமாக அவனிடம் பேசுகிறோம். அந்தப் பயமும், நயமும் சேர்ந்து வருவதால் இரண்டும் உண்மையென்று எண்ணக் கூடாது. ஆள் முன்னால் இருக்கிற வரைக்கும் பயத்துடன் இருந்து நயந்து போவது போல் காட்டிக் கொள்வோம்.அவன் அந்தப்புறம் நகர்ந்த பிறகு சிரிப்போம். பயம் உள்ள இடத்தில் உண்மையான பக்தி இருப்பது மன இயல்புக்கு ஒத்தது அன்று. பசியிடம் பயம் இருந்தால் சோற்றினிடம் பக்தி உண்டாகும். பூச்சாண்டியிடம் பயம் உண்டாகும் குழந்தைக்கு அம்மாவிடம் அன்பு உண்டாகிறது. நோயிடம் பயம் உண்டாகும்போது அதைத் தீர்க்கும் மருத்துவனிடம் பக்தி உண்டாகிறது. ஆகவே பயம்