பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 சாகாது எனையே சரணங் களிலே காகா நமனார் கலகம் செயும்நாள்' என்று அநுபூதியில் பாடுகிறார். திருத்தணி இப்போது நாம் பார்க்கும் விண்ணப்பத்தைத் திருத்தணியில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானைப் பார்த்துச் சொல் கிறார் அருணகிரியார். அந்தத் திருத்தணி மாமலையில் என்ன வளம் இருக்கிறது என்பதையும் சொல்கிறார். அங்கே நீர் நிலை கள் பல உண்டு. வாபீ கூப தடாகங்கள் என்று சேர்த்துச் சொல் வார்கள். பல வாவிகள் அங்கே இருக்கின்றன. திருத்தணிக்குக் காவித் திருமலை என்று ஒரு பெயர். அங்குள்ள ஒரு வாவியில் காவி மலர் தினந்தோறும் பூக்குமாம். காவி மலருக்குக் 'கல்லாரம் என்று ஒரு பெயர். காவி மலர் பூப்பதனால் கல்லார மலை என்று அதற்கு ஒரு பெயர் உண்டு. அதனால் அங்கே இருக்கிற பெருமானுக்குச் செங்கல்வராயன் என்று பெயர். செங்கல்வம் என்பது செங்கழு நீர்ப்பூவுக்கு ஒரு பெயர். அத் தகைய வாவி சிறந்து விளங்குவது திருத்தணி. அதோடு நில வளமும் பொருந்திய ஊர். ஆதலால் வாவிக்கு அருகில் விசால மான வயல்கள் ஊரைச் சுற்றி இருக்கின்றன. ஆண்டவன் எழுந்தருளியிருக்கும் இடமாகையால் பல பெரியார்கள் வந்து அங்கே தங்குவார்கள். நல்ல எண்ணங்கள் அலை அலையாக எங்கும் சூழும்படியாக அவர்கள் தங்கியிருப் பார்கள். எண்ண அலைகள் சூழ்ந்த குளிர்ந்த சூழ்நிலை குளிர்ச்சியை உண்டாக்கும். கோபம் உள்ளவன் இருந்த இடத்தை அவன் எழுந்தவுடன் தொட்டுப் பார்த்தால் சுடும். அதுபோல் அன்பு உடையவர்களுடைய உடம்பு குளிர்ந்து இருக்கும். சிறந்த பெரியவர்கள் அன்பு உடையவர்களாக ஓரிடத்தில் தங்கியிருந் தால் அவர்கள் தங்கும் இடம் ஒரளவு குளிர்ச்சியுடையதாக இருக்கும். அவர்கள் மூச்சுக் காற்றில் வெப்பம் அதிகமாக இராது. அவர்களுடைய குளிர்ந்த எண்ண அலைகள் நம்மைச் சூழ்ந்தால் தண்மை உண்டாகும். இதனை இன்றும் உலகில் பிரத்தியட்ச மாகப் பார்க்கலாம். பசுமையே இல்லாத இடத்தில் சில பெரியவர்கள் வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் வாழும் சூழ்நிலை பசுமை நிரம்பியதாக இருக்கும். 416