பக்கம்:கனிச்சாறு 2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  91

இற்றைத் திரைப்பட நடிகரில் ஒருவர்
நிற்றல் இயலுமா? நிலைக்குமா இவர்புகழ்? 260
ஆடிய அன்றையத் திரைப்படக் கதைகள்
ஓடிய மாதங்கள், ஆண்டுகள் எத்தனை?
இந்நாள் படங்களோர் மாதம் இருக்குமா?
அந்நாள் மக்களுக் கறிவு குறைச்சலா?

உண்மை என்ன! உணர்கின் றீர்களா?
நன்மை தருவதே மக்கள் நாடுவர்!
பொழுதைப் போக்கவோ திரைப்படம் வந்தது?
பொழுதைப் போக்கவே என்று கொண் டாலும்
பழுதுற நடந்தா பொழுதைக் கொல்வது?
ஒழுக்கம் குலைவுற நடப்பதா ஓய்வு? 270
மனத்தைச் சிதைப்பதா மனம்பெறும் மகிழ்ச்சி?
தன்னை அழிப்பதா தான்பெறும் வாழ்க்கை?

திரைப்படக் காரர் ஒரு நூறு பேர்கள்
மறைப்புற நடத்தும் ஒழுக்கக் கேடே
கலைகள், இசைகள், காட்சிகள் என்றால்
நிலைகுலைந் திடட்டும் நெடிய இவ் வுலகம்!
மலைகளும் கடலும் குமுறி எழட்டும்!

விலைமதிப் பற்ற உயிர்க்குலம் விழட்டும்!
ஒருசிறு கூட்டம் உலகைச் சிதைப்பதா?
பெருகிய மக்கள் பேச்சற் றிருப்பதா? 280
குடியரும் களியரும் கூத்தரும் காமரும்
தடியரும் கயவரும் தரங்கெட வாழ்வரும்
அமைத்துக் காட்டிடும் அமைப்பே கலையெனில்
எமைப் பாட் டுணர்வினால் எழுப்பிச் சிதர்த்திடும்
முங்குபே ராற்றலின் முனைப்புக் கென்பெயர்?
தங்குபே ருலகின் ஒழுங்கிற் கென்பெயர்?

அழுக்கிலா ஒன்று தூய்மையா வதுபோல்
ஒழுக்கம் என்பதன் உருவமே கலைகள்!
சிதறிய தூசுகள் தூய்மையா காப்போல் 290
சிதறிய ஒழுக்கமும் கலைகள் ஆகா!
ஒருதுறை நேரிய உணர்வுக் குவியலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/127&oldid=1424680" இலிருந்து மீள்விக்கப்பட்டது