பக்கம்:கனிச்சாறு 2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  93

நின்றவன் எழுமுன் எழுந்தவன் நடந்தான்
என்ற கதையாய் இழிந்தது திரைப்படம்!

ஆகவே, ஓ!ஓ! திரைப்படக் காரரே!
வாகாய்த் திருந்தி வருங் காலத்தில்
நல்ல கதைகளில் நாட்டஞ் செலுத்துக!
நல்ல பாடல்கள் நாட்டுக்குத் தருக! 330
நடிகர் நல்ல நடிப்பினை நாட்டுக!
நடிகையர் பெண்மையை நங்கையர்க் குணர்த்துக!
படப்பிடிப் பாளர் பண்பைக் காட்டுக!
படத்தின் இயக்குநர் பாடறிந் தொழுகுக!
நாட்டைத் திருத்திடும் நல்ல தொண்டினில்
நாட்டங் கொள்க நானிலம் சிறக்கவே!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/129&oldid=1424682" இலிருந்து மீள்விக்கப்பட்டது