பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 95
56 இறுதிப் போர்!
ஆடினை ஆயிரம்! பாடினை ஆயிரம்!
ஆர்ப்புற யாத்தனை விடுதலைப் பாயிரம்!
அசைத்ததா பகைவரை உன்றனின் வாயுரம்?
தமிழா! அட, தமிழா - நீ
அழன்றெழு! அரிமா நடையிடு! வினைமுடி!
அதுதான் செந்தமிழ்த் தாயுரம்!
வீசினை கைகளை; விளைத்தனை சொற்களை;
விலக்கினை யா,குல மதமெனும் புற்களை?
விளைத்திட டா,தனித் தமிழெனும் நெற்களை!
தமிழா! அட, தமிழா நீ
விரைந்தெழு! வரிப்புலி நடையிடு; துணிவொடு!
வீழ்த்திடு வாய், பகைப் பற்களை!
உன்னுடன் பிறந்தவன் உனையெதிர்க கின்றான்;
உன்பகைக் கே,செருப் பாய் உழைக் கின்றான்;
உங்களை இரண்டாக்கி ஆரியன் வென்றான்!
தமிழா, அட, தமிழா - நீ
உடன்விழி! களிறென நடையிடு; முனைவொடு!
உயிர்ப்பிலா விடில், அவன் கொன்றான்!
ஆரியப் பார்ப்பனன் திருந்தினான் என்றே
ஆருனக் குரைத்தனர்? அவன்குணம் ஒன்றே!
அவனுடற் பூணூலும் உரைதரும் நன்றே!
தமிழா, அட,தமிழா - நீ
ஆர்த்தெழு! ஏறென நடையிடு! வலிவொடு
அகப்பகை விலக்குக இன்றே!
எத்தனை ஆண்டுகள் புரிந்தனை போரே!
இற்றதா ஆரியப் பார்ப்பனர் வேரே!
இன்னுமுன் கட்டாரிக் குண்டடா கூரே!
தமிழா! அட, தமிழா - நீ
இணைந்தெழு, இடியென முழுங்கிடு! நூறிடு!
இலையெனில் தொலைந்ததுன் பேரே!