இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 177
நாடு சிதைத்தன வாம்;நமை யேபெரும்
நாயகம் செய்தனவாம் - தமிழ்ப்
பீடு குலைத்திழி சூத்திரர் என்றொரு
பெயரைத் தந்தனவாம்! - அதனால்,
(பற்றி)
பெண்களைத் தாழ்த்தின வாம்;அருந் தாய்த்தமிழ்ப்
பேற்றை யிழித்தன வாம்! - இரு
கண்களை யும்குரு டாக்கி அறியாமைக்
சுங்குலில் வீழ்த்தின வாம்! - அதனால்,
(பற்றி)
வேதம் மனுஇதி காசபு ராணங்கள்
மேவும்பல நூல்கள் என
வேதியர் ஓதின யாவுமே தீமைகள்!
வெம்மைக் கொடுந் தேள்கள்! - அதனால்,
(பற்றி)
-1981