பக்கம்:கனிச்சாறு 2.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


139

வருங்காலம் தமிழர்க்கே !


நெடுங்காலம் முன்பே, நம்
தமிழர் க்கு விழுந்துவிட்ட
இனக்கூனை நிமிர்ப்ப தென்றால்,
கடுங்கால வினைமுயற்சி,
தேவையென மொழி, இன, நாட்
டுரிமையினர் உணர்தல் வேண்டும்!
கெடுங்காலம் இனும் நமக்குப்
போகவில்லை; உட்பகையும்
மறைய வில்லை! எனினும் நன்மை
அடுங்காலம் தொலைவிலில்லை;
அன்றன்றும் அடுத்தடுத்தும்
முயன்றிடுக! முயற்சி வெல்லும்!

பகைவர்க்கு வலிவில்லை;
நம்மைவிட அறிவில்லை;
பரவிவிட்ட நோய்நம் நோயே!
தகைவர்க்குக் குறைவில்லை;
தருமுழைப்பும் கேடில்லை;
தாழ்வெல்லாம் நாம்செய் தாழ்வே!
தொகை நிறைந்த தொண்டர்க்கும்
தொய்வில்லை; துணிவிற்கும்
தாழ்வில்லை; தொன்மை எண்ணி
வகைசெய்து திட்டமிட்டுப்
போரிட்டால் வருங்காலம்
தமிழர்க்கு வாழ்கா லம்மே!

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/246&oldid=1437448" இலிருந்து மீள்விக்கப்பட்டது