பக்கம்:கனிச்சாறு 3.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


79  தந்தை செல்வா பெயரால் தழைக்கும் தமிழீழம்!

எடுப்பு


தந்தை செல்வா தம்பெயர் சொன்னால்
தவறாமல் தழைக்கும் தமிழீழம் தன்னால்! (தந்தை)

தொடுப்பு



சிந்தையில் எரியும் உரிமைச் சுடர்விளக்கம்!
செழுந்தமிழ் மணக்கும் விடுதலை முழக்கம்! (தந்தை)

முடிப்பு



முந்தையர் நாட்டின் முழுஉரி மைப்போர்
மூண்டிடக் கொளுத்திய வாய்மையின் திருப்பேர்!
தந்தையர் ஆண்ட தமிழீழத் தாயகம்
தமிழருக் காக்கிய வரலாற்று நாயகம்! (தந்தை)

குலைநடுங் காத கொள்கையின் குன்றம்!
கூர்மை நோக்கிலோ உயர்அற மன்றம்!
மலையகம் இணைந்த மணித்தமி ழீழம்
மாய்க்கும் பதவியை உதறிய வேழம்! (தந்தை)

செயல்திறம் மிகுந்த சிந்தனை வெள்ளம்!
செகுக்கும் மறம்விளையும் தூய்நெறி உள்ளம்!
அயலவன் சிங்களன் ஆளுமை ஒதுக்கியே
அன்னைத் தமிழீழ நாட்டினைப் புதுக்கிய (தந்தை)

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/115&oldid=1424607" இலிருந்து மீள்விக்கப்பட்டது