இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 11
9 இருள்மிகு நாடே.......!
அரசியல் தெளியா மாந்தரிங் கொருபால்;
அறம்பிழை வாணிகர் ஒருபால்;
வரவியல் செலவியல் அறிகிலர் ஒருபால்;
வருவதை முடக்குவர் ஒருபால்;
கரவுளம் ஒருபால்; குலவெறி வளர்க்கும்
கயவரும் களியரும் ஒருபால்;
இரவினும் திண்ணிய மடமைகொள் நாடே
எங்கொளி பெறுகுவ தினியே!
-1963
10 எத்தனை நாள் போராட்டம்?
முத்தமிழை மீட்பதுவோ பகைவர்முன்
வீழ்வதுவோ, முடிவு செய்வீர்!
கத்துவதால் குரல்வற்றி உயிர்வற்றிக்
களைத்தல்லால் பயனென் கண்டீர்?
செத்தழிவோம் என்றெண்ணி அஞ்சினிரோ?
தமிழ்மறவீர்! சீற்றம் எங்கே?
எத்தனைநாள் போராட்டம் நடப்பதிங்கே?
உயிர்குடிக்க எழுக நாடே!
-1964