இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
90☐ கனிச்சாறு – நான்காம் தொகுதி
59
உயர்வைப் பின்பற்று!
உயர்வும் தாழ்வும்
உலகில் இருக்கும்;
உயர்வைப் பின்பற்று!-தாழ்(வு)
உணர்வை நீ, அகற்று!-அறி(வு)
ஓங்குக நூல் கற்று!-மன
அயர்வும் சோர்வும்
அச்சமும் இன்றி
ஆர்வத் துடன் வினைசெய்-நல்
ஆக்கங்கள் வரும்; இதுமெய்-உனை
அழிப்பவை மடி, சினம், பொய்!
பெயரும் புகழும்
பொருளும் கருதிப்
பிழையாய் நடக்காதே!-நெறி
பேணுதல் கடக்காதே;-புறம்
பேசுதல் தொடுக்காதே!-பெருந்
துயரம் வரினும்
தூற்றுதல் பெறினும்
தூய்மை இழக்காதே!-மனந்
தொய்ந்திடக் கொழுக்காதே!-கீழ்மைத்
தொழும்பில் வழுக்காதே!
-1978