பக்கம்:கனிச்சாறு 4.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168  கனிச்சாறு – நான்காம் தொகுதி


பொங்கும் பசுஞ்சோலை-எனப்
பூரிக்கச் செய்கையிலே-பழி
தங்கும் தமிழ்நிலமே!-உனைத்
தாழ எண்ணும் உளமே!-ஓ
தண்டமிழ்த் தாய்நிலமே! 4

எண்ணப் பசுஞ்சுவடும்-அட
எண்ணத் தொலைவிலதாம்-பல
வண்ணப் பெரும்புகழும்-அக
வாழ்வும் புற மறமும்-என்
கண்ணிலே நீருகுக்கும்-பழங்
காட்சிக் குளந்துயி லும்!-இன்று
புண்ணில்வே லிட்டதைப் போல்-இழி
போக்கிற் குளம்வெதும்பும்!-ஓ
புன்மைத் தமிழ்நிலமே! 5

அன்றைய நாள் வருமோ!-தமிழ்
ஆண்டிடுமோ மீண்டும்?-அட
இன்றைய புன்மையெல்லாம்-நிலை
இற்றிற்றுச் செத்திடுமோ?-உயிர்க்
கன்றுக்குப் பாலருந்தி-அகக்
காட்சிக்கு மீட்சிதரும்-எனை
வென்ற தமிழ்க்குயிலே-செயல்
வீழ்ந்த தமிழ் மறமே-சொல்
அன்றைய நாள் வருமோ? 6

-1972
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/203&oldid=1444498" இலிருந்து மீள்விக்கப்பட்டது