இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 183
உரைகள் பெருகின!
உழைப்புகள் பெருகின!
ஊரைச் சுரண்டுவோர்
பெருகினரே!
கல்விகள் கற்கிறோம்!
கலைகள் பயில்கிறோம்!
கவலைகள் தீர்ந்திடக்
காணவில்லை!
செல்வங்கள் குவிந்தன!
சிறப்புகள் வளர்ந்தன!
சிறுமைகள் தொலைந்திட
வழியுமில்லை!
பாட்டாளி தாழ்கிறான்!
பணக்காரன் வாழ்கிறான்!
படித்தவர் யாருக்கும்
வெட்கமில்லை!
ஏட்டிலே எழுதுவோர்
எழுந்து போராடினால்
இருநிலை மாய்ந்திடும்
ஐயமில்லை
-1986