பக்கம்:கனிச்சாறு 4.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  205


149

எதிர்பார்க்காதே ! ஏமாற மாட்டாய் !


எதிர் பார்க் காதே!
ஏமாற மாட்டாய்!
புதிராய் இராதே!
பொத்தக மாய்இரு!
அதிரப் பே சாதே!
அமைவாய்ப் பேசு!
முதிர முதிர
முனிவை அடக்கு!

அன்புக்கு அன்புசெய்!
அறிவைப் புகழ்ந்துரை!
தென்பொடு நில்;நட!
தெளிவொடு பேசு;செய்!
வன்பொடு செயல்தவிர்!
வாய்மையே வெல்லும்!
துன்பினில் சோர்வுஏன்?
தோள்களை நிமிர்த்து!

கனிவொடு பேசு!
கல்,இறக் கும்வரை!
தனிமையும் பழகு!
தவ உளம் வளம்தரும்!
இனிமையும் அளவுகாண்!
இருளிலும் விழித்திரு!
குனிதொழில் இழிதரும்!
கொள்கை நிலைத்திரு!

-1994
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/240&oldid=1444563" இலிருந்து மீள்விக்கப்பட்டது