14☐ கனிச்சாறு – நான்காம் தொகுதி
11
தமிழ்க்கு மூவுடைமை !
எடுப்பு
நீயே,செந்தமிழ்த் தாயே!,நான்
நினையறிந் தவன்; ஒரு சேயே! - முன்
நிலைகெட மிகவும்நொந் தாயே; - என்
நெஞ்சினில் எழுந்தது; எழுந்தது தீயே!
(நீயே)
தொடுப்பு
ஓயேன்; இனியுன்றன் உழைப்பினில் சாயேன்!
உடல் பொருள் ஆவியும் ஈவேன்! ஈவேன்!
(நீயே)
முடிப்பு
காயே விழைவார்; கனிச்சுவை அறியார்!
கண்விழிப்பார்; உளம் விழியார்; - தமிழ்த்
தாயே! நின்னறம் நின்பொருள் பேணார்!
தம்செயல் அறிவுக்கு நாணார்! நாணார்!
(நீயே)
அயல்மொழி பயில்வார், அதனடி துயில்வார்!
அரும்பொருள் அயில்வார்; நினையார்; - மதி
மயலுறப் பிறன்கைச் சிறுபொருள் ஆனார்!
மற்றிவர் செயலுக்குக் கூனார்! கூனார்!
(நீயே)
பால்கறந் தேபிற கன்றினுக் கூட்டியே,
வால்கறப் பார்கழி மூடர்!, - அது
போல்சிறந் தாயுனைப் பிறர்கொளத் தந்தார்!
புன்மொழி அறிந்துளம் நொந்தார்! நொந்தார்!
(நீயே)
-1962