இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 153
154 இழிந்தோரும், உயர்ந்தோரும்!
காக்கைக்கு 'வேம்பு' இனிக்கும்;
கழுதைக்குத் ‘தாள்' இனிக்கும்;
கழிவுக் குப்பை,
ஈக்களுக்கோ மிக இனிப்பாம்!
இழிந்தவர்கள் இவை போல்வார்.
எனினும் வண்ணப்
பூக்களிலே தேனெடுக்கப்
போகின்ற தேனீப்போல்
பொறிவண் டைப்போல்
ஊக்கமொடு நல்லனவே
உவந்து, உண்டு மகிழ்ந்திடுவர்
உயர்ந்தோர் தாமே!
-1968
155 நட்பும் பகையும் !
நகைப்பவர் யாவரும்
நண்பர்கள் ஆகார்!
தொகைப்பெருக் கென்பதும்
தோழமைக் கில்லை!
மிகைப்படப் பழகுதல்
மிகுதுயர் செய்யும்!
பகைப்பவர் என்பவர்
பழகி யிருந்தவர்!
-1968