பக்கம்:கனிச்சாறு 5.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  23


23  அன்னை!

உன்னைக் கொண்டு வந்தே, இவ்
உலகில் விட்டது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!


கண்ணைப் போல உன்னையே
காத்து வருவது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!


எண்ணெய் இட்ட விளக்குப் போல்
இரவில் காத்தது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!


உண்ண உண்ணப் பாலையே
ஊட்டிக் கொடுத்தது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!


கண்ணே! மணியே! என்றுன்னைக்
கட்டிக் கொண்டது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!


பொன்னே! பூவே! என்றுன்னைப்
போற்றிப் புகழ்ந்தது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!


உன்னைக் காக்க மருந்துண்டே
உணவை வெறுத்தது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/57&oldid=1424851" இலிருந்து மீள்விக்கப்பட்டது