இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 25
25 அறிவும் பயனும்!
இரும்புத் துண்டு கிடந்தது;
எடுத்து வீசி எறிந்தனர்!
கருமான் ஒருவன் கண்டனன்;
காய்ச்சிக் கத்தி செய்தனன்!
எலும்புத் துண்டு கிடந்தது;
எடுத் தெறிந்து சென்றனர்!
எலும்புக் காரன் கண்டனன்;
எடுத்துப் பிடிகள் செய்தனன்!
தகரம் ஒன்று கிடந்தது;
தூக்கி வீசி எறிந்தனர்!
தகரக் காரன் கண்டனன்;
தகரக் குவளை செய்தனன்!
துரும்பும் நமக்குப் பயன்படும்!
தோன்றும் பொருள்கள் யாவுமே,
அறிவுள் ளார்க்குப் பயன்படும்!
அறிவில் லார்க்குப் பயனில்லை!
-1969