பக்கம்:கனிச்சாறு 5.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  25


25  அறிவும் பயனும்!

இரும்புத் துண்டு கிடந்தது;
எடுத்து வீசி எறிந்தனர்!
கருமான் ஒருவன் கண்டனன்;
காய்ச்சிக் கத்தி செய்தனன்!

எலும்புத் துண்டு கிடந்தது;
எடுத் தெறிந்து சென்றனர்!
எலும்புக் காரன் கண்டனன்;
எடுத்துப் பிடிகள் செய்தனன்!

தகரம் ஒன்று கிடந்தது;
தூக்கி வீசி எறிந்தனர்!
தகரக் காரன் கண்டனன்;
தகரக் குவளை செய்தனன்!

துரும்பும் நமக்குப் பயன்படும்!
தோன்றும் பொருள்கள் யாவுமே,
அறிவுள் ளார்க்குப் பயன்படும்!
அறிவில் லார்க்குப் பயனில்லை!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/59&oldid=1424856" இலிருந்து மீள்விக்கப்பட்டது