இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 45
50 ஆவே! ஆவே!
ஆவே! ஆவே! ஆவின்பால்
அருந்தக் கொடுப்பாய்; தருவேன், புல்!
தாவும் கன்றுக் குட்டிக்குத்
தந்தே மிகுந்ததைத் தருவாயே!
பசும்புல் வெளியில் மேய்ப்பேனே!
பால்போல் கழுநீர் வைப்பேனே!
கொசு, ஈ மொய்க்கா வகையாகக்
கொட்டிலைத் தூய்மை செய்வேனே!
உடலைத் தடவிக் கொடுப்பேனே!
உண்ணிகள் கிள்ளி எடுப்பேனே!
கடலைப் பிண்ணாக் கிடுவேனே!
கயிற்றைத் தளர்த்தி விடுவேனே!
இரைந்து கூவி அழைப்பாய், நீ!
என்னை எழுப்பி விடுவாய், நீ!
பரந்த வாயில் தெளிப்பதற்குப்
பச்சைச் சாணம் இடுவாய், நீ!
அம்மா தந்த தின்பண்டம்,
அனைத்தும் கன்றுக் குட்டிக்கே!
அம்மா பெற்ற குழந்தைகளை
அன்பாய் வளர்க்கும் தாயே, நீ!
-1973