இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
180 ☐ கனிச்சாறு - ஏழாம் தொகுதி
138
பொங்கலாமோ...?
உள்ளமோ ஓட்டைப் பானை,
உணர்வெலாம் அணைந்த கொள்ளி!
கள்ளமும் கரவும்போட்டுக்
கயமையைக் கலந்து பொங்கி,
எள்ளலும் இழிவும் சேர்த்தே
இகழெனும் இலையிலிட்டுக்
குள்ளமும் குருடும்கூடிக்
குதித்திடல் ‘பொங்க’ லாமோ?
-1965
139
மரத் தமிழன்!
பார்ப்பான் ஒருவன்; பழிவடவன்
மற்றொருவன்;
போர்ப்பண் இசைத்துப் புறம்நிற்க,
இங்கு நீ
புத்தரிசி தெள்ளிப் புதுப்பால்
உலையேற்றிப்
புத்துருக்கு நெய்கலந்து, பொங்கியுண்பாய்
செந்தமிழா!
பொங்கல் நறுஞ்சுவையும், புத்துருக்கு
நெய்ச்சுவையும்
தங்குநின் வல்லடிமை தன்சுவைக்கே
ஈடாமோ?
ஏடா! தமிழனே! என்னிதுகாண்
நின்பெருமை
மாடாநீ? இல்லை; மரம்!
-1966