இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
228 ☐ கனிச்சாறு - ஏழாம் தொகுதி
குன்றி னேறியங் குதிர்த்த கட்டளை
கொண்டு குழவியின் குலவிய
நன்றி பாடினன் செல்லத் துரையெனும்
நாந லப்புலம் வாழ்கவே!
4
உள்ளத் தூன்றிய வித்தெனும் இறை
உணர்வின் ஊறி முளைத்துயர்
கொள்ளத் தீங்கனி அருள்பழுத் திளங்
குழவிப் பாடல் எனுஞ்சுவை
அள்ளத் தந்தருள் செல்லத் துரையெனும்
அருஞ்சொற் புலவனிங் காக்கிய
பிள்ளைத் தீந்தமிழ் இயேசு பிரான்புகழ்
பேசும் உலகினி தோங்கவே!
5
-1985
196
மணிகண்டனின்
‘கூட்டுக்குயில் பாட்டுக்குரல்’ நூலுக்கு மதிப்புரை!
அணிகண்டேன்; நல்ல
அழகுகண்டேன்; ஆக்கப்
பணிகண்டேன்; கண்டேன்நற்
பாங்கும் மணிகண்டன்
பாடல்நூல் கண்டேன்;
பயன்கண்டேன்; பைந்தமிழ்த்தாய்
ஆடல்நூல் காணும்
அரங்கு!
-1985