இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
238 ☐ கனிச்சாறு - ஏழாம் தொகுதி
205
‘செயலும் செயல் திறனும்’ - நூல் படையல்!
அன்பூறும் நெஞ்சினன்; அருந்தமிழ்த்தாய்
வாயினன்; அன்றன் றைக்கும்
தென்பூறும் நம்மருங் கொள்கைசொலும்
நாவினன்; தீந்த மிழ்க்கே
என்பூறும் தொண்டினன்; இளைஞர்மகிழ்
பண்பினன்; எமைய ணைத்தே
இன்பூறும் அன்பினால் எமக்குதவும்
கொடையினன் வளங்கோ என்போன்!
தென்புதுவை நன்னகர் வாழ்ந்திருந்து,
தென்மொழித் தொண்டு செய்து,
நன்பிரான்சு மேவியே நனிவாழ்ந்த
போதுமே நயந்தே எம்மை
முன்பழைத்துச் சொற்பொழி வுலாச்செய்த
மொய்ம்பன் அரி மாவளங்கோ
இன்படைய லாகுமிந் நூலவற்கே
என்றுமே வாழ்க வென்றே!
-1988