பக்கம்:கனிச்சாறு 8.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  107


அடுத்துப்,
பாரதி தாசன் பைந்தமிழ் இனத்தையெந்
நேரமும் காலமும் நிமையமும் காத்தான்!
அவனின் காவல் எப்படிப் பட்டது?
அவன்குர லாலே அவனுளங் கேட்போம்!
அவனின் சூளுரை ஆர்ப்பரிப் பிஃதாம்!


‘ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
உவப்புடன் நான் சேர்ப்பேன்’

“செந்தமிழே உயிரே நறுந்தேனே!

செயலினை மூச்சினை உனக்களித்தேனே!’


- இப்படிப் பலவா றெடுத்தெடுத் துரைக்கலாம்!
அப்படி உரைக்கினும் அடிமைத் தமிழனுக்
குணர்வு கொளுத்துதல் உலகினில் கடினம்!
உணர்வுத் தீயினை ஊர்ஊ ராகப்
பாரதி தாசனின் பாடலால் பரப்புக!
வேர்அது தமிழர்க்கு! தமிழ்க்கது விளைவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/121&oldid=1448463" இலிருந்து மீள்விக்கப்பட்டது