பக்கம்:கனிச்சாறு 8.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  109

எல்லாரும் மனத்தாலும் அதுவிலக்கல் வேண்டும்!
புதுவிளக்கு மாற்றுக்குப் பட்டுக்குஞ் சம்போல்
போற்றாத சட்டத்தால் யாருக்கென் பயனாம்?
புதுவிளக்கம் பெறவேண்டி மாநாடு வைத்தார்!
பொற்பதக்கம் தனில்வயிரம் பதித்ததுபோல் என்பேன்!

சட்டத்தால் தடுத்தாலும் பழக்கத்தால் செய்வோம்!
‘சரிக்குச்சரி’ என்பதெல்லாம் சட்டந்தான்! சாதிப்
பட்டத்தால் - சாதியினால் - வேறுபட்டுப் போனோம்!
பழக்கமென ஒன்றுண்டே யார்சொல்லிக் கேட்கும்?
திட்டத்தால் நடப்பதெல்லாம் பொருட்செலவாம் ஆட்சி!
திருப்பதிக்கும் பழனிக்கும் போய்ப்போய் வந்தாலும்
ஒட்டுவது தான்ஒட்டும்; முழுமையுமா ஒட்டும்?
உண்மையிலே மதுவிலக்கும் அப்படித்தான் என்பேன்!

மதுக்கடையை எடுத்தார்கள்; புதுக்கடைவைத் தார்கள்!
மதுவேண்டாம் என்றார்கள்; கலக்கல்குடித் தார்கள்!
எதுக் குறைவு நம்மவர்க்கு? எதையும்செய் வார்கள்?
எத்தனைதான் தடுத்தாலும் கள்ளப் பணத்தாள்கள்
புதுப்புதிதாய் அடித்துவர விலையா, நம் மக்கள்?
போட்டசட்டம் ஏட்டிலென்றால் புழங்குசட்டம் நாட்டில்!
பதுக்கலுக்குச் சட்டமிட்டார்! கடத்தல்செய் கின்றோம்!
பாதியினைச் சட்டத்தால்! பழக்கத்தால் மீதி!

எனவேதான் ‘மதுவிலக்கு மாநாடென்’ றில்லை!
‘மதுவிலக்குச் செயற்பாட்டு மாநாடென்’ றார்கள்!
முனமேதான் மதுவிலக்குச் சட்டத்தால் செய்தோம்!
முழுவதையும் விலக்கினமா? கள்ளமது வுண்டோம்!
மனமேதான் சட்டத்தின் செயற்பாட்டு மேடை!
மனந்திருந்தத் தானிந்த மாநாடு போட்டார்!
இனமெல்லாம் அப்படித்தான்; கோணிக்கொண்டு போகும்;

குடிக்காதீர் என்றுசொன்னால் யாரிங்குக் கேட்பார்!
குறள்முனிவன் காலத்தில் இருந்தேதான் சொன்னார்!
பிடிக்காத ஒன்றாநாம் விட்டுவிட்டுப் போக!
பெரியபுட்டில் ஒன்றென்றால் அடடா, நம் அண்ணன்
நடிக்காத நடிப்பெல்லாம் நடிப்பார்; வான் மேலே
நடப்பது போல் மனமகிழ்வர்! அதைவிலக்கு வாரா?
துடிக்காதா அவர்நெஞ்சம்! எண்ணி யெண்ணிப் பார்ப்பார்?
‘தூதூதூ என்னசட்டம்?’ எனத்தேடிப் போவார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/123&oldid=1448466" இலிருந்து மீள்விக்கப்பட்டது