பக்கம்:கனிச்சாறு 8.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140  கனிச்சாறு - எட்டாம் தொகுதி

‘தாய்மொழி நூற்றுக்கு நூறுபெயர் - பெறத்
தக்கதோர் கட்டாயம் ஆக்கிவிட்டால்
போய்விடும் கல்லாமை’

‘செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்
நம்மதுரஞ்செய் கிழங்கு - காணில்
நாவில் இனித்திடும் அப்பம்
உன்னை வளர்ப்பன தமிழா - உயிரை

உணர்வை வளர்ப்பது தமிழே!’


தமிழ்வளர்ச்சி யாலிந்த வையகமே உயுமாம்!
தண்டமிழ்ப்பா வேந்தனவன் சொல்லுவதைக் கேட்பீர்!

‘வையகமே உய்யுமாறு வாய்த்த தமிழ்

என்அரும் பேறு’


தமிழ்வளர்ச்சித் திட்டமொன்றே அவனின் தமிழ்இயக்கம்
‘தமிழியக்கம்’ நூல்போதும் அவன்பெருமை சாற்ற!

தமிழ்வளர்க்காத் தமிழினமோ தான்வளர்தல் இல்லை!
தன்மொழி,கா வாதஇனம் வளர்ந்ததுண்டோ உலகில்!

‘ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம்
ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்’!

‘உன்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற
வெற்றியெலாம் உன்றன் வெற்றி’

‘அரசினரின் மொழியாக, அரசியலார் மொழியாக
அரசியல் சார்
வரிசையுறு சட்டமன்றின் மொழியாக, வையம் அறி
மொழியாகத்
திருமலிந்த தமிழ்மொழிதான் ஆகும்வகை நம்புலவர்
சேர்ந்து தொண்டு
புரிகஎன வேண்டுகின்றோம்! பொழிகஎன வேண்டுகின்றோம்

பொன் மழை தான்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/154&oldid=1448543" இலிருந்து மீள்விக்கப்பட்டது