இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 9
கல்விவல்ல சான்றோர்கள் கருத்தால் காக்க!
கருத்துவளம் மிக்கோர்கள் நூலால் காக்க!
செல்வவள முற்றவர்கள் செழிக்கச் செய்க!
செய்வினைகள் விரும்பிடுவார் பொறுப்பை ஏற்க!
சொல்வளங்கொள் பேச்சாளர் ஊர்கள் தோறும்
சோர்வின்றிப் பொழிந்திடுக! புரிவீ ராயின்
வெல்வழியும் தொலைவிலில்லை! தமிழி யக்கம்
விரைந்துலகில் மறுமலர்ச்சி கூட்டும் நன்றே!