பக்கம்:கனிச்சாறு 8.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 69


பொய்யிலே முக்காற்படி - புரட்டிலே காற்படி
வையகம் ஏமாறும்படி
வைத்துள்ள நூற்களை ஒப்புவதெப்படி? நூலைப்படி
                                                 - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி
அகப்பொருள்படி அதன்படி புறப்பொருள்படி நல்லபடி
புகப்புகப் படிப்படியாய்ப்
புலமைவரும் என்சொற்படி - நூலைப்படி - சங்கதமிழ்

                                                 நூலைப்படி - முறைப்படி’


எப்படி? படிபடி! எத்தனைப் படிகள்?
செப்படி வேலையா, சொற்படி கட்டுதல்?
எழுதிப் பாருங்கள்; இழுப்பு தெரியும்!
பாரதி தாசனோர் புலவனா என்பான்.
பாரதிர முழக்குவேன்! பாரதி தாசன்
உன்னை விட, உன் அப்பனை விடவும்
மன்னாதி மன்னன்! பாட்டிலே மன்னன்!
பொழுதிருந் தால், நான் புரட்டிக் காட்டுவேன்!
அழுமூஞ்சி களுக்கே அடிமுடி தெரியுமா?
எதுகைத் தொடையால் எம்பா வேந்தன்
புதுவகைப் பாநடை புனைந்து காட்டினான்!
சத்தி முத்தப் புலவர் மாக்கதை!
பத்தன்று; ஒன்றைப் பகர்வேன் கேளுங்கள்;
அரசி இரவெலாம் அரசனின் வரவை
எதிர்பார்த் திருந்தாள்! இவனோ விடியலில்
பள்ளி எழுச்சி பாடுவான், வந்து!

‘இருள் மடிந்தது!
கூவும் சேவல் கழுத்தோ ஒடிந்தது!
கதிரொளி எங்கும் படிந்தது!
துயில் எழுப்புவோரின்
இசைத்தேன் காதில் வடிந்தது!
பெண்ணே விழி, பொழுது விடிந்தது!

கதவைத் திறந்து அரசி சொல்கிறாள்:

இரவுநான் தூங்கியபின் வந்தீர்கள் போலும்!
வழிபார்த் திருந்தன இருவிழி வேலும்!
உலாவி அலுத்தன என்இரு காலும்!
துவண்டு போயிற்று என்இடை நூலும்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/83&oldid=1448058" இலிருந்து மீள்விக்கப்பட்டது