பக்கம்:கனிச்சாறு 8.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


சால்பாகும்! அந்நிலையைச் சாற்றிடவும் தேவையில்லை!
மாணாக்கர் தம்நிலையின் மாண்புணர வேண்டுகின்றேன்!
வீணாக்க வேண்டா விளைபயிரை என்றே நம்
பேரா சிரியப் பெருமக்கள் எண்ணட்டும்!
வாராத வந்தெய்தும்! வந்தவிடர் மாண்டொழியும்!
நேராக யார்மேலும் குற்றம் நினைக்கவில்லை!
தேராமல் கூறுவது தேர்ந்தபின்னை மாறுவது
தீரா இடர்ப்படுக்கும் என்று தெளிந்திருப்பீர்!
ஓராமல் யாருக்கும் ஓர்குறையும் சாற்றற்க!
அஞ்சுதற்கே அஞ்சுக! அஞ்சாமைக் கஞ்சற்க!
எஞ்சுகின்ற நாளெல்லாம் எந்தமிழ்க்கும் நாட்டுக்கும்
மக்களுக்கும் நற்றொண்டு மாண்புறவே செய்மின்கள்!
தக்கபடி வாழ்மின்கள்! தாழ்வகலக் காண்பீர்கள்

பெண்டிர் நலம்பற்றிப் பேசுகின்றோம்! பெண்களுக்குப்
பண்டைப் பெருமை பரக்கவுண்டாம்! ஆனாலும்
அன்னவர்க்குத் தக்க அறிவமைப்பு, செய்கடமை,
பன்னலமும் வாய்க்கும் பரந்த நறுங்கல்வி,
ஆகிய வற்றில் அறிவாய்ந்த சான்றோர்கள்
ஈக வுளத்தோடே எண்ணி வகுத்தளிக்க
வேண்டும்! அவர்க்குரிமை வேண்டும்! அவர்க் காடவர்போல்
யாண்டும் துணிந்துரைக்க - யாண்டும் துணிந்துசெய
வாய்ப்பளிக்க வேண்டும்! வளமாய் உடல்வேண்டும்!
தாய்ப்பெண்டிர் யாவர்க்கும் தன்னந் தனிச்சலுகை
நல்குவதே நல்லறமாம்! நஞ்சுமன ஆடவர்கள்
பல்குழந்தைப் பேறளித்துப் பாவையரைக் கொத்தவரைப்
பிஞ்சுபோ லாக்கிப், பிணந்தின்னுந் தீக்கழுகுக்
குஞ்சுகள்போல் ஏழெட்டைக் கொத்திப் பிடுங்குதற்கே
ஆளாக்கி விட்டே அவரைக்கை விட்டிடுவார்!
தூளாக்க வேண்டுமவர் தோளெலும்பை; மார்பெலும்பை!
கன்னி ஒருத்தியை,ஓர் காமுகனும் கற்பழித்தால்
அன்னவனின் பெற்றோர்க்(கு) அகலாச் சிறையென்று
சட்டமிடல் வேண்டும்! சரிக்குநிகர் வாழ்க்கையினைக்
கட்டியவன் தன்மனைக்குக் காட்டிவிடல் வேண்டுமென
வல்லார் வகுத்தளிக்கும் வாய்ப்புவரும் நாள்வரட்டும்!
நல்லார் பிழைபடவும் நாமிசையக் கூடாது!
பெண்டிர்க்குக் கற்பு பெரிதானால் ஆடவர்க்கும்
உண்டு அதுபோல் என்னும் உயர்நெறியும் வேண்டுமிங்கே!
கன்னியரை விற்றிங்குக் காசடிக்கும் பெற்றோர்க்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/98&oldid=1448110" இலிருந்து மீள்விக்கப்பட்டது