பக்கம்:கனியமுது.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


தோள்மீது கையைப் போட்டுத்

துடிப்புடன் முருக வேளும்

கோள்மூட்டும் தோழர் கூட்டம்

குமைந்திட உறுதி தந்தான்!

"நாள் மட்டும் என்றே? ஆனால்

நட்புக்கோர் எடுத்துக் காட்டாய்

ஆள்மாற்றச் சம்ம தித்தேன்;

அறைகூவல் ஏற்பீர்!” என்றான்.

பெற்றோர்கள் பணம்அ னுப்பப்

பிள்ளையார் பொறுப்பு ணர்ந்து

கற்றால்தான் உறுதி அன்றிக்,

காலத்தைக் கரைத்து விட்டு,

மற்றோர்க்குப் பார மாகி

மகிழ்பவர் நிறைய உண்டே!

சற்றேனும் எதிர்கா லத்தைச்

சார்ந்திடின் தவறே இல்லை.

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/53&oldid=1380181" இலிருந்து மீள்விக்கப்பட்டது