பக்கம்:கனியமுது.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

கேட்டுவரப் போனானே மரிய சூசை
    கிண்டலான சிரிப்போடு திரும்பி வந்தான் ;
“கேட்டீரா ஐயா, நாம் சொன்ன பேச்சைக்
    கேளாமல் இருமனைவி கொண்ட தாலே
போட்டிக்குப் பிரசவித்தாள் மூத்தாள் ; இன்று
    பொல்லாத காய்ச்சலினால் தொல்லை கண்டாள்.
நாட்டுக்கே தீமையன்றே இதனால் ஐயா,
    நான் கொஞ்சம் வீடுவரை செல்வேன்” என்றான்.



“உனக்கென்ன அதற்குள்ளே விரைவாம்?” என்றேன்.
    “உடல் நலத்தில் குறைவுண்டோ, யார்க்கும்?”
என்னத்
தனக்குள்ளே நாணமுற்றுத் தலைக விழ்ந்து,
    தயக்கமுடன் மரியசூசை பேசு கின்றான் :-
“எனக்கொன்றும் இல்லை ஐயா இளைய பெண்ணை
    இங்கழைத்து வந்துள்ளேன் பிரச விக்க :
மனக்கவலை புரியாத மனைவி, மற்றோர் -
    மகவு தர இருக்கின்றாள் இன்றோ, என்றோ? ”

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/74&oldid=1383233" இலிருந்து மீள்விக்கப்பட்டது