இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அடக்கங்தான் அமரருக்குள் உய்க்கு மென்ற
அருங்குறளை நெறியாகக் கண்டார் போலும்,
தொடக்கமுதல் துணைவிக்குக் கீழ்ப்ப டிந்து
தொல்லைதரும் பிணக்கின்றி வாழ எண்ணி,
முடக்குவாத நோய்தாக்கக் கொடுமைப் பட்டு
மூன்றாண்டு காலமாக வதையுந் தாயார்
கிடக்கின்ற படுக்கைக்கு விடைகொ டுக்கக்
கல்லூரி செல்கின்ற நேரம் போகக்
கடைவீதி சுற்றிடுவார் : கால்கள் நோவப்
பல்வேறு திசைதிரிந்து, குறைந்த காசில்
பண்டங்கள் வாங்கிடுவார் ! கஞ்சன் என்று
சொல்லாத பேரில்லை மாணாக் கர்கள்
சுத்தமாக விடையெழுதித் தந்த போதும்
பொல்லாத ஆசிரியர் பத்துக் கைந்து
73